Home இலங்கை டான் (டேன்) பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரி கைது – விசாரனைக்கு அனுமதி!

டான் (டேன்) பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரி கைது – விசாரனைக்கு அனுமதி!

by admin

அரசியல் செயற்பாட்டாளர் டான் (டேன்) பிரியசாத்தை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி, கொழும்பு, கறுவாத்தோட்டம் பகுதியில் வைத்து நேற்று (02.05.25) ) மாலை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருக்கு, டான் பிரியசாத்தின் சகோதரரின் கொலையுடனும் தொடர்பு இருப்பதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அரசியல் செயற்பாட்டாளரான டான் பிரியசாத் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி இரவு கொலன்னாவையில் உள்ள சாலமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குறித்த கொலை தொடர்பில் டேன் பிரியசாத்தின் சகோதரரின் கொலையின் முக்கிய சந்தேக நபர்களான பந்துல பியல் மற்றும் மாதவ சுதர்சன ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டதுடன், சம்பவத்திற்குப் பின்னர் அவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர், சம்பவம் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கிய நிலையில், அதன் விளைவாக, இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒருவர் கைது செய்யப்பட்டார்.

துலான் என்ற அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தக் கொலை காஞ்சிபானை இம்ரான் என்ற குற்றவாளியின் வழிகாட்டுதலின் கீழ் இடம்பெற்றுள்ளமை தெரியவந்தது.

இந்த விடயத்தில் தந்தை-மகன் என இருவரும் தொடர்புப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இருப்பினும், தந்தை-மகன் இருவரில் தந்தை கொழும்பில் கறுவாத்தோட்டம் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று மாலை அவர் கைது செய்யப்பட்டார்.

52 வயதான பந்துல பியல் என்ற குறித்த நபர் வேபட வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கிற்கு பொறுப்பான பிரதி காவற்துறை மா அதிபர் கயங்க மாரப்பனவின் ஆலோசனைக்கு அமைய மேல் மாகாண குற்றத் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More