19 வயது யுவதியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இந்த ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கல காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். வீடு வீடாகச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தே இவ்வாறு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
வளர்ந்து வரும் அரசியல் கட்சியொன்றிலிருந்து லக்கல பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (03) பிற்பகல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளாா்.
தேர்தல் பிரச்சாரம் முடிவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கும் பிரச்சார நடவடிக்கையின் போது இந்தசம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.