176
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட 04 , மூன்றாம் ஆண்டு மாணவர்கள் உட்பட 11 சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர் ஒருவரின் மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் எனும் சம்பவம் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேலும் நான்கு மாணவர்கள் சமனலவெவ காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினா் சரணடைந்த மாணவர்கள் விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வும் தெரிவித்துள்ளனர்.
Spread the love