இறுதிப் போா் நடவடிக்கையின் போது வடக்கு மற்றும் கிழக்கில் விடுதலைப் புலிகளின் முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் மற்றும் பிற கட்டிடங்களில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இராணுவ புலனாய்வு சபையின் பொறுப்பில் உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க நகைகள் அடங்கிய தங்கக் கையிருப்பு குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. , இலங்கை மத்திய வங்கி, தேசிய நகை ஆணையம் மற்றும் பல அரசு நிறுவனங்களுக்கு இன்று திங்கட்கிழமை (05) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவுவைப் பிறப்பித்துள்ளாா்.
மேலும் குறித்த தங்கப்ம் தொடர்பான அனைத்து விசாரணைகளையும் நடத்திய பின்னர், அவை அனைத்தையும் இலங்கை மத்திய வங்கியின் பெட்டகங்களில் சேமித்து வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளாா்.