Home இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 10 மணிவரை 20 வீத வாக்களிப்பு…

உள்ளூராட்சி சபைத் தேர்தல் 10 மணிவரை 20 வீத வாக்களிப்பு…

by admin

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பு, நாடளாவிய ரீதியில் மிகவும் சுமூகமான முறையில் நடைபெறுகின்றது. இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணிக்கு நிறைவடையும். 10 மணி வரை நிலைவரப்படி, அண்ணளவாக 20 சதவீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன என மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு பிரதேச தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றாலும், இந்த முறை அஞ்சல் வாக்கு முடிவுகள் தனித்தனியாக வெளியிடப்படாது என்று திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையர் எஸ்.கே.டி. நெரஞ்சன் கூறினார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்னும் கிடைக்காத வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிக்க எந்தத் தடையும் இல்லை என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வாக்குச் சாவடிகளைச் சுற்றி தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்குமாறு அங்கு ஒன்று கூடுவதை தவிர்க்குமாறும் அனைத்து பொதுமக்களையும் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளையும் காவற்துறை தலைமையகம் கேட்டுக்கொள்கிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்களிக்க, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குப் பதிலாக, தங்கள் தங்குமிடங்களிலேயே தங்கியிருப்பது கவனிக்கப்பட்டுள்ளது.

ஆகக் கூடுதலாக 394,533 பேர், கொழும்பு மாநகர சபைக்கு வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். ஹப்புத்தளை நகர சபைக்கு 3051 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் இது ஆகக் குறைந்த வாக்காளர்களின் எண்ணிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குச்சீட்டில் எழுதவோ, கீறவோ, கிறுக்கவோ வேண்டாம். புள்ளடி (X) இடப்படாத எந்தவொரு வாக்குச்சீட்டும் நிராகரிக்கப்படும்.

வாக்குச்சீட்டில் கட்சிகளின் பெயர்களுக்கு எதிரே கட்சிகளின் சின்னங்களும் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களுக்கு எதிரே சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களும் இருக்கும், அதற்கு எதிராக வெற்றுக்கட்டம் இருக்கும், அதில் புள்ளடி (X) இடவேண்டும்.

மதுபானம் அருந்துவிட்டு அல்லது போதைப்பொருட்கள் பாவனை செய்துவிட்டு வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் வருவதற்கு தடை.

339 உள்ளூராட்சி மன்ற சபைகளுக்கு 8287 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று (06) காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More