214


யாழ்ப்பாணத்தில் அமைதியான முறையில் நடைபெற்றுவரும் வாக்களிப்பில்,நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, யாழில் வாக்களித்தார்.
அதேவேளை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட சென். ஜேம்ஸ் பாடசாலையிலும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் ஆகியோர் யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட அத்தியடி கணபதி கலாசார மண்டபத்திலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ.சுமந்திரன் குடத்தனை பாடசாலையிலும் தமது வாக்கினை செலுத்தியுள்ளார்.




Spread the love