Home இந்தியா ஐபிஎல் – காலவரையறையின்றி ஒத்திவைப்பு

ஐபிஎல் – காலவரையறையின்றி ஒத்திவைப்பு

by admin

 

இந்தியா – பாகிஸ்தான் போர் பத, ற்றம் காரணமாக ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.   இந்த கடினமான காலங்களில்  இந்திய கிரிக்கெட் வாரியம் , இந்தியாவுடன் நிற்க   விரும்புவதனால்  ஐபிஎல் போட்டி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாக  தொிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்றுக் கொபண்டிருக்கும்  ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகள்  எப்போது நடைபெறும்? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை , தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்  கிரிக்கெட் தொடரை  இடையில்  நிறுத்தி, மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More