கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். மேலும் , உயிரிழந்த 21 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் கொத்மலை காவல்துறையினா், சென்றுக்கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனா்.
கொத்மலையில் பாாிய விபத்து – 13 போ் பலி
May 11, 2025 at 07:06
நுவரெலியா – கண்டி பிரதான வீதியின், கொத்மலை – கெரண்டி எல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 13 உயிரிழந்ததுடன் பலா் காயமடைந்துள்ளனர்.