Home இலங்கை உயிா் மாய்த்த மாணவியின்  பெற்றோரை சந்தித்த பிரதமா்

உயிா் மாய்த்த மாணவியின்  பெற்றோரை சந்தித்த பிரதமா்

by admin

 

கொட்டாஞ்சேனையில் உயிா் மாய்த்த மாணவியின்  பெற்றோர் மற்றும் விசாரணையை மேற்கொண்ட  காவல்துறையினா் , நேற்று (10)  சனிக்கிழமை  பிரதமரை  , பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து  விரிவான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனா்.  இந்த சந்திப்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்தக்  கலந்துரையாடலின் போது, மாணவியின்  மரணத்திற்குக் காரணமாக கூறப்படும் பாடசாலை மற்றும் கல்வி வகுப்பில் நடந்ததாகக் சம்பவங்கள் குறித்து விரைவான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளுமாறு  காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது.

சம்பவம் பதிவான தருணத்திலிருந்து பொருத்தமான நடைமுறைகள் திறம்பட பின்பற்றப்பட்டதா என்பதை மதிப்பிடுவதற்காக கல்வி அமைச்சு தற்போது  உள்ளக விசாரணையை நடத்தி வருகிறது.

அத்துடன், இதுபோன்ற வழக்குகளைக் கையாள பொறுப்பான அரசு நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க, ஆலோசகர் குழந்தை மருத்துவ நிபுணர் வைத்தியர் அஸ்வினி பெர்னாண்டோ தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More