Home இலங்கைஉள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டுகோள்!

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் விபரங்களை சமர்ப்பிக்க வேண்டுகோள்!

by admin

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பான தகவல்களை இந்த வாரத்திற்குள் வழங்குமாறு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன், உறுப்பினர்களின் பெயர்களை வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கடந்த 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் வென்ற இடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விதம் குறித்து தேர்தல் ஆணைக்குழு அனைத்துக் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் விபரங்களை ஒரு வாரத்திற்குள் வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.

மேலும், பெரும்பான்மை அதிகாரம் கொண்ட உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்களையும் சமர்ப்பிக்குமாறும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 50% வீதத்திற்கும் அதிகமான பெரும்பான்மையைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு இது குறித்து அறிவிப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட பிறகு, பெரும்பான்மை அதிகாரங்களைப் பெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான மேயர்கள் மற்றும் தலைவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் எனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More