Home இலங்கைசெளத்பார் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆபத்தான பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்.

செளத்பார் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆபத்தான பிளாஸ்டிக் மூலப்பொருட்கள்.

by admin

மன்னார் மாவட்டத்தில் செளத்பார் தொடக்கம் தாழ்வுபாடு உட்பட பல்வேறு கடற்கரையோர பகுதிகளில் நுண்ணிய பிளாஸ்டிக் போன்ற சிறிய அளவிலான உருண்டைகள் இலட்சக்கணக்கில் கரை ஒதுங்கியுள்ளன.  முன்னதாக இலங்கை கடற்பரப்பில் பற்றி எாிந்த  எவர் கிறீன் கப்பலில் இருந்து வெளியேறியது போன்ற வடிவமுடைய பொருளே  இவ்வாறு தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகிறது.

இவ்வாறான பின்னனியின் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(3) கரையோர காவல் திணைக்களம்,கடற்படை,ராணுவம் இணைந்து முதற்கட்டமாக கடற்கரை ஓரங்களில் ஒதுங்கியுள்ள குறித்த பிளாஸ்டிக் மாதிரி பொருட்களை அகற்றியுள்ளனர்.

குறிப்பாக கடற்கரையோரங்களில் இலட்சக்கணக்கில் இவ்வாறான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நுண்ணிய பொருட்கள் காணப்படுகின்ற மையினால் முழுமையாக குறித்த பொருட்களை அகற்ற முடியாத நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை  இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியிலே விபத்திற்குள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ்.3 என்கின்ற  கப்பலில் காணப்பட்ட பிளாஸ்ரிக் துகள்கள் தற்போது எமது கடற்கரையோர பகுதிகளில் கரையொதுங்குவதினால் மக்கள் குறித்த பொருட்களை சேகரிக்காது செயல்பட வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.  மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (13) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More