Home இலங்கைஇரவு உணவு அருந்திய பின் படுக்கைக்கு சென்றவர் காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

இரவு உணவு அருந்திய பின் படுக்கைக்கு சென்றவர் காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்பு!

by admin

யாழ்ப்பாணம் வசாவிளான் பகுதியில் உள்ள தோட்டக்கிணறு ஒன்றில் இருந்து பெண்ணொருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த கிருபாமூர்த்தி கலா (வயது-55) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இரவு உணவருந்தி விட்டு உறக்கத்துக்குச் சென்ற இவரைக் காலையில் காணவில்லை என்றும், அவரைத் தேடிய போது கிணற்றில் சடலமாக காணப்பட்டார் என மரண விசாரணைகளில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More