Home இலங்கைலொறியும்  வானும்  நேருக்கு நேர் மோதி விபத்து – நாலவா் உயிாிழப்பு

லொறியும்  வானும்  நேருக்கு நேர் மோதி விபத்து – நாலவா் உயிாிழப்பு

by admin

 

குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும்  வானும்  நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட  விபத்தில்  நால்வா்  உயிரிழந்துள்ளனா்.  அந்த விபத்து இன்று (25) அதிகாலை  இடம்பெற்றதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

குருணாகலில் இருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த வானும், எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த ஏழு பேர் தலாவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த இந்த வான் ஜா-எலயில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தது எனவும்  உயிாிழந்தவா்களில் வான் சாரதியும் உள்ளடங்குவதாகவும் வான் சாரதியின்   தூக்கக் கலக்கம் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்   தலாவ  காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.  இறந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் காவல்துறையினா் குறிப்பிட்டுள்ளனா்.

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More