Home இலங்கையாழில் 7ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு – 108 வீடுகள் சேதம் ; தீவகத்திற்கான போக்குவரத்திற்கு தடை

யாழில் 7ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு – 108 வீடுகள் சேதம் ; தீவகத்திற்கான போக்குவரத்திற்கு தடை

by admin

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை முற்பகல் 11 மணி வரையில் 2ஆயிரத்து 397 குடும்பங்களை சேர்ந்த 7ஆயிரத்து 513 பேர் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை, யாழ்ப்பாணம் பிரதேச செயலக பிரிவுகளில் 130 குடும்பங்களைச் சேர்ந்த 390 பேர் 12 பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலாளர்களினால் வழங்கப்பட்டு வருகின்றது. அதேவேளை 1580 குடும்பங்களை சேர்ந்த 4ஆயிரத்து 993 பேர் தமது நண்பர்கள் மற்றும் உறவினர் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரையில் 01வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 108 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் புங்குடுதீவிலிருந்து குறிக்கட்டுவான் வரையான தரைப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் குறிக்கட்டுவானிலிருந்தான சகல படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் நெடுந்தீவு, நயினா தீவு, எழுவை தீவு, அனலை தீவிற்கான படகுசேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது,

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் தங்குவதற்கான பாதுகாப்பு நிலையங்கள் பிரதேச செயலாளர் பிரிவுரீதியாக அமைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கிராம சேவையாளரின், பிரதேச செயலாளரின்; உதவியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More