Home உலகம்அதிரடி உத்தரவு: அமெரிக்க ‘கிரீன் கார்ட்’ திட்டம் உடனடியாக இடைநிறுத்தம்!

அதிரடி உத்தரவு: அமெரிக்க ‘கிரீன் கார்ட்’ திட்டம் உடனடியாக இடைநிறுத்தம்!

by admin
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அந்நாட்டின் புகழ்பெற்ற ‘கிரீன் கார்ட்’ (Green Card) திட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதாக உத்தரவிட்டுள்ளார்.
தீர்மானத்திற்கான பின்னணி:
அண்மையில் அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் (Brown University) இடம்பெற்ற கோரமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமே இந்தத் தீர்மானத்திற்கு முக்கிய காரணமாகும். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு மாணவர்கள் உயிரிழந்ததுடன், ஒன்பது பேர் காயமடைந்தனர். தாக்குதலை நடத்திய மாணவன், இந்த கிரீன் கார்ட் திட்டத்தின் ஊடாகவே அமெரிக்கக் குடியுரிமையைப் பெற்றுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முக்கிய தகவல்கள்:
ஜனாதிபதியின் உத்தரவு: பாதுகாப்பு காரணங்களைக் கருதி, இத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
தாக்கம்:
இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் சுமார் 50,000 பேர் சட்டப்பூர்வமாக அமெரிக்காவில் குடியேற வாய்ப்பு வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள்:
நடப்பு ஆண்டிலும் இத்திட்டத்திற்காக உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 20 மில்லியன் (2 கோடி) பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த புதிய குடியேற்றக் கொள்கை உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More