Home இலங்கைஅனர்த்த நிவாரணப் பணிகளுக்காக நோரிடேக் (Noritake) நிறுவனம் நிதியுதவி!

அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக நோரிடேக் (Noritake) நிறுவனம் நிதியுதவி!

by admin
அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக்கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில், ஜப்பானின் பிரபல நோரிடேக் (Noritake Company Limited) நிறுவனம் 20 மில்லியன் ரூபா நிதியுதவியை வழங்கியுள்ளது.
இதற்கான காசோலையை, Noritake Lanka Porcelain நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கென்ஜி ஒபாரா (Mr. Kenji Obara) அவர்கள், 2025 டிசம்பர் 18ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து தன்னிடம் கையளித்தார் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
சவாலான இந்த காலகட்டத்தில், எமது நாட்டு மக்களின் நலன் கருதி வழங்கப்பட்ட இந்த மனிதாபிமான உதவிக்கு தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More