Home இலங்கைவீட்டு கழிவு நீரை வெள்ள வாய்க்காலுக்குள் விட்டவருக்கு 5ஆயிரம் ரூபாய் தண்டம்

வீட்டு கழிவு நீரை வெள்ள வாய்க்காலுக்குள் விட்டவருக்கு 5ஆயிரம் ரூபாய் தண்டம்

by admin

வல்வெட்டித்துறை பகுதியில் வீட்டுத் தங்குமிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரை பொது மழைநீர் வாய்க்காலில் விட்ட நபருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. வல்வெட்டித்துறை தென் கிழக்கு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.

மழைநீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்பட்ட பொது வாய்க்காலில் வீட்டு கழிவுநீரை விட்டதால் ஏற்பட்ட துர்நாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு குறித்து வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்குப் புகார்கள் கிடைத்தன.

இதனையடுத்து வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் பொதுச்சுகாதார பரிசோதகர் ப. தினேஷ் இது குறித்து விசாரணை நடத்தி, பருத்தித்துறை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். இன்று (ஜனவரி 23, 2026) இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் தனது தவற்றை ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து நீதவான் அவருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

பொது இடங்களை அசுத்தப்படுத்தும் மற்றும் சுகாதார சீர்கேடுகளை விளைவிக்கும் குடிமக்களுக்கு இதுவொரு எச்சரிக்கையாக அமையுமென நகராட்சி மன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tag Words: #Valvettithurai #PublicHealth #EnvironmentalLaw #PointPedroCourt #Sanitation #VVTNews #LKA #CivicDuty #FineImposed

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More