Home இலங்கையாழில். இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது!

யாழில். இ.போ.ச சாரதியை போதையில் தாக்கிய இளைஞன் கைது!

by admin

 

மதுபோதையில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்தின் நடத்துனரை தாக்கிய குற்றத்தில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் , நிறை போதையில் மிதிபலகையில் நின்று பயணித்தவரை நடத்துனர் பேருந்தில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளார்.

அதனால் நடத்துனரும் , மதுபோதையில் இருந்த இளைஞனுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டதில் , இளைஞன் நடத்துனரை தாக்கியுள்ளார்.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் இளைஞனை மடக்கி பிடித்து, யாழ்ப்பாண காவற்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த காவற்துறையினரிடம் இளைஞனை ஒப்படைத்தனர்.

இளைஞனை கைது செய்த பொலிஸார் காவல் நிலையம் கொண்டு சென்று தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More