Home இலங்கைஅநுரவின் அரசியல் பயணம்: ஹரின் பெர்னாண்டோ வியந்து கூறும் பாடங்கள்!

அநுரவின் அரசியல் பயணம்: ஹரின் பெர்னாண்டோ வியந்து கூறும் பாடங்கள்!

by admin
அநுரவின் அரசியல் பயணம்: ஹரின் பெர்னாண்டோ வியந்து கூறும் பாடங்கள்! 🗳️
“நினைத்துப் பார்க்க முடியாத எல்லைகளையும் எட்ட முடியும் என்பதற்கு அநுர குமார திஸாநாயக்க ஒரு சிறந்த உதாரணம்” என முன்னாள் அமைச்சரும் ஐ.தே.கவின் முக்கயஸ்தருமான ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அநுரவின் அரசியல் பயணத்தில் தான் கற்றுக்கொண்ட முக்கிய பாடங்கள் குறித்து அவர் முக்கிய விடயங்களை பகிர்ந்துள்ளார்:
குறிப்பாக அரசியலில் அவர் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையே அவரை இன்று இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் வெறும் 3 உறுப்பினர்களை மாத்திரம் வைத்துக்கொண்டு அவர் அரசியல் செய்த விதம் மெச்சத்தக்கது. இதன் மூலம் முதலிடம், இரண்டாமிடம் என்பது முக்கியமல்ல; இலக்கை நோக்கி பயணித்தால் யாரும் எட்ட முடியாத உயரத்தை அடையலாம் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
இன்று அவரைச் சுற்றி எத்தனை பேர் இருந்தாலும், அவர் கடந்து வந்த கரடுமுரடான பாதை அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் இப்போது செல்லும் பயணம் வெற்றியடைவதற்கு அவரது நேர்மைத் தன்மையே முக்கிய காரணம்.
“நாடாளுமன்றத்தில் உள்ள 159 பேரை விடவும், அநுர மீதே மக்கள் அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளனர்.” – ஹரின் பெர்னாண்டோ
________________________________________
அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான திசைக்காட்டி (NPP) கூட்டணி, அண்மைய பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள பின்னணியில் ஹரின் பெர்னாண்டோவின் இந்த கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. சிறிய ஆரம்பத்திலிருந்து நாட்டின் அதியுயர் பதவி வரை அவர் மேற்கொண்ட பயணம் பலருக்கும் ஒரு உந்துசக்தியாக அமைந்துள்ளது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More