155
தலைவன் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் CJNG கும்பல் பொதுமக்களின் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளைத் தாக்கி வருகின்றனர். ஜாலிஸ்கோ, குவானாஜுவாடோ (Guanajuato) உட்பட 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பேருந்துகள், லாரிகள் மற்றும் கார்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டு சாலைத் தடைகளாக மாற்றப்பட்டுள்ளன.
சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு கசிந்த தகவலின்படி, தங்களது தலைவனின் மரணத்திற்குப் பழிவாங்க உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களைத் தாக்கப்போவதாக அக்கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. எனினும், அரசு தரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்க உளவுத்துறை முக்கியத் தகவல்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
மெக்சிகோ ராணுவம் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 22, 2026) அன்று நடத்திய அதிரடித் தாக்குதலில், உலகின் மிக ஆபத்தான போதைப்பொருள் கடத்தல் தலைவர்களில் ஒருவரான ‘El Mencho’ கொல்லப்பட்டார். ஜாலிஸ்கோ (Jalisco) மாகாணத்தில் உள்ள டபால்பா (Tapalpa) நகரில் நடந்த மோதலில் அவர் காயமடைந்து, சிகிச்சைக்காக மெக்சிகோ நகருக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார்.
புவேர்ட்டோ வல்லார்ட்டா (Puerto Vallarta) மற்றும் குவாடலஜாரா (Guadalajara) விமான நிலையங்களுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு மற்றும் தீவைப்புச் சம்பவங்கள் நடந்ததால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி பல மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் போது ராக்கெட் லாஞ்சர்கள், கவச வாகனங்கள் மற்றும் நவீன ரகத் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மோதலில் இதுவரை பல கடத்தல் கும்பல் உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ராணுவ வீரர்கள் சிலரும் காயமடைந்துள்ளனர்.
Spread the love

