Home உலகம்கரீபியன் கடற்பரப்பில் பயங்கரவாதக் கப்பல் மீது தாக்குதல்!

கரீபியன் கடற்பரப்பில் பயங்கரவாதக் கப்பல் மீது தாக்குதல்!

by admin
அமெரிக்க தெற்கு கட்டளையகத்தின் (SOUTHCOM) தளபதி ஜெனரல் பிரான்சிஸ் எல். டோனோவன் அவர்களின் நேரடி உத்தரவின் பேரில், Joint Task Force Southern Spear படையினர் அதிரடித் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
நேற்று பெப்ரவரி 23 அன்று, கரீபியன் கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த பயங்கரவாத அமைப்பிற்குச் சொந்தமான கப்பல் ஒன்று இலக்கு வைக்கப்பட்டது. புலனாய்வுத் தகவல்களின்படி, இந்தக் கப்பல் போதைப்பொருள் கடத்தல் பாதைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த துல்லியமான தாக்குதலில் மூன்று ஆண் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நடவடிக்கையில் அமெரிக்க இராணுவத் தரப்பில் எவருக்கும் காயங்களோ அல்லது பாதிப்புகளோ ஏற்படவில்லை.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கை, பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More