Home இலங்கையாழ். மத்தியில் மீட்கப்பட்ட கரு

யாழ். மத்தியில் மீட்கப்பட்ட கரு

by admin

 

யாழ்ப்பாணம் நகர் மத்தியில் கரு சிதைவொன்று மீட்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக பெண்ணொருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பின்னர் அங்கிருந்து காணாமல் போயிருந்தார்.  அதன் பின்னர் அப்பகுதியில் சுமார்  6- 7 மாத கரு வீதியில் காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கருவினை கடதாசி பெட்டியால் மூடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  அவ்விடத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய பெண் , எங்கேனும் சட்டவிரோத கருக்கலைப்பினை மேற்கொண்ட பின்னர் கரு சிதைவை வீதியில் வீசி சென்று இருக்கலாம் என காவல்துறையினா்  சந்தேகிக்கின்றனர்.  சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைகாவல்துறையினா்  முன்னெடுத்துள்ளனர்.
#யாழ்ப்பாணம் #கருச்சிதைவு #யாழ்_பொலிஸார் #மத்தியபேருந்துநிலையம் #சட்டவிரோதகருக்கலைப்பு #JaffnaNews
 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More