Home இலங்கைவெளிநாட்டில் நீண்டகாலம் தங்கியிருந்த ‘லங்கா இ நியூஸ்’ இணையதள ஆசிரியர் சந்தரு சேனாதீர கைது!

வெளிநாட்டில் நீண்டகாலம் தங்கியிருந்த ‘லங்கா இ நியூஸ்’ இணையதள ஆசிரியர் சந்தரு சேனாதீர கைது!

by admin
வெளிநாட்டில் நீண்டகாலம் தங்கியிருந்த ‘லங்கா இ நியூஸ்’ (Lanka E News) இணையதளத்தின் ஆசிரியரான ரான சந்தரு சேனாதீர இன்று (11) நாட்டிற்கு திரும்பியபோது, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறை தகவல்களின் படி, நீதிமன்ற விசாரணை தொடர்பான ஒரு வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்ததன் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது கட்டுநாயக்க காவல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு, அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
‘லங்கா இ நியூஸ்’ இணையதளத்துடன் தொடர்புடைய செய்தியாளர் பிரகீத் எக்னலிகொடா 2010ஆம் ஆண்டு காணாமல் போன சம்பவத்திற்குப் பின்னரும், அந்த நிறுவனத்திற்கு எதிராக ஏற்பட்ட தீவிபத்துகள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாகவும், தனது உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சந்தரு சேனாதீர நாடு விட்டு வெளியேறினார்.
அதன்பின் சுமார் 16 ஆண்டுகளாக பிரிட்டனில் அரசியல் தஞ்சம் அடைந்து வாழ்ந்து வந்ததார்.
மேலும், அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலும் பொதுத் தேர்தலும் நடைபெற்ற காலப்பகுதியில், ‘லங்கா இ நியூஸ்’ இணையதளத்தின் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு (National People’s Power) கருத்தியல் ரீதியான ஆதரவை வழங்கும் பணியிலும் அவர் ஈடுபட்டிருந்ததாக அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இந்த கைது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More