132
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு அருகிலுள்ள கேரனிகஞ்ச் (Keraniganj) பகுதியில் அமைந்துள்ள எரிவாயு லைட்டர் (Gas-lighter) தயாரிக்கும் தொழிற்சாலையில் சனிக்கிழமை (ஏப்ரல் 4, 2026) மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கடம்தலி கோல் சத்தர் (Kadamtali Gol Chattar) பகுதியில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையில் மதியம் 1:11 மணியளவில் தீ பரவத் தொடங்கியது. சுமார் ஏழு தீயணைப்புப் பிரிவினர் பல மணிநேரம் போராடி மாலை 4:44 மணியளவில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், தொழிற்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த பங்களாதேஷ் தீயணைப்பு மற்றும் சிவில் பாதுகாப்புத் துறை ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இக்குழு அடுத்த ஏழு வேலை நாட்களுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவல்களின்படி, மின் கசிவு அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் முறையற்ற வகையில் சேமிக்கப்பட்டமை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. தொழிற்சாலையில் முறையான பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா மற்றும் தீயணைப்பு வசதிகள் இருந்ததா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Spread the love

