மன்னார் தாராபுரம் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் உள்ள துருக்கி சிற்றி பகுதியில் விபத்தின் போது உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட ஒரு வயது ஏழு மாதம் ஆன குழந்தை ஒன்றின் சடலம் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமைவாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (21) மன்னார் தாராபுரம் மையவாடியில் அகழ்ந்து எடுக்கப்பட்டது.
குறித்த சடலம் தொடர்பில் மன்னார் காவல்துறைத் தரப்பினர் முறையான விசாரணைகளை முன்னெடுக்காமல் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நல்லடக்கம் நடந்துள்ளதாக சந்தேகத்தின் அடிப்படையில் முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்த நிலையில் விசாரணை முன்னெடுத்த நீதவான் இன்று செவ்வாய்க்கிழமை (21) விசாரணைகளுக்காக குறித்த குழந்தையின் சடலம் தோண்டி எடுக்க உத்தரவு வழங்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நீதவான் முன்னிலையில் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. குறித்த அகழ்வு பணியின் போது மன்னார் காவல் நிலைய உயர் அதிகாரிகள் உள்ளடங்களாக காவல்துறையினா் மற்றும் அனைத்து தரப்பினரும் குறித்த மையவாடி பகுதியில் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

