Home இலங்கைகட்டுநாயக்கவில் அதிர்ச்சி: பல கோடி பெறுமதியான கொக்கேய்னுடன் மலேசிய வாலிபர் கைது!

கட்டுநாயக்கவில் அதிர்ச்சி: பல கோடி பெறுமதியான கொக்கேய்னுடன் மலேசிய வாலிபர் கைது!

by admin
சுமார் 9 கோடியே 8 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் வெளிநாட்டு பயணி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து போதைப்பொருளைப் பெற்றுக்கொண்ட 23 வயதான மலேசிய பிரஜை ஒருவர், அங்கிருந்து டுபாய் சென்றுள்ளார். பின்னர், டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 என்ற விமானம் மூலம் இன்று (18ஆம் திகதி) காலை 09.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சோதனையில் சிக்கிய சொக்லேட் போத்தல்கள்:
சந்தேக நபர் தனது பயணப்பொதியில் போதைப்பொருள் தொகையை மறைத்து வைத்து, விமான நிலையத்தின் “பசுமை வழி” (Green Channel) ஊடாக எவ்வித சோதனையுமின்றி வெளியேற முயன்றுள்ளார். எனினும், அங்கு கடமையிலிருந்த சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் அவரை மறித்து தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது, அவர் கொண்டு வந்த பயணப்பொதியில் இருந்த 03 சொக்லேட் டொப்பி போத்தல்களுக்குள், 92 மாத்திரைகளாக மிகவும் நுணுக்கமான முறையில் பொதி செய்யப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 1 கிலோ 816 கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்பொருள் சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
மேலதிக நடவடிக்கை:
கைது செய்யப்பட்ட மலேசிய பயணி மற்றும் அவரிடமிருந்து மீட்கப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருள் தொகுதி என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய காவல் துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
சுங்க அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் இணைந்து இக்கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More