தோஹாவிலிருந்து மான்செஸ்டருக்குப் பயணித்துக் கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) QR23 (Boeing 777-300ER) பயணிகள் விமானத்தை, பிரித்தானிய அரச விமானப் படையின் (RAF) இரு யூரோஃபைட்டர் டைஃபூன் (Eurofighter Typhoon) போர் விமானங்கள் வழிமறித்துப் பாதுகாப்பாக மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளன.
கடந்த ஜூலை 24 வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6:00 மணியளவில் தேசிய வான்வழிப் போக்குவரத்துச் சேவைக்குக் (NATS) கிடைத்த போலி மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்தே இக் வான்வழி அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரச பாதுகாப்பு அமைச்சகம் (MoD) மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் காவற்துறை (Greater Manchester Police) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விபரங்களின்படி RAF Coningsby தளத்திலிருந்து புறப்பட்ட இரு Typhoon FGR4 போர் விமானங்கள், மத்திய இங்கிலாந்தின் நொட்டிங்ஹாம் (Nottingham) வான்பரப்பில் கத்தார் ஏர்வேஸ் விமானத்தை இடைமறித்து, மான்செஸ்டர் விமான நிலையம் வரை பாதுகாப்பு அணிவகுப்பில் அழைத்து வந்தன.
விமானம் இரவு 7:45 BST மணியளவில் மான்செஸ்டர் விமான நிலையத்தின் 23R ஓடுபாதையில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. பயணிகள் அல்லது விமானக் குழுவினருக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இப் போலி அச்சுறுத்தல் அழைப்பை மேற்கொண்டதாகப் போல்டன் (Bolton) பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை அடையாள கண்டுள்ள காவற்துறையினர், அவனிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இச் சிறுவன் அப் பயணத்தில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கிரேட்டர் மான்செஸ்டர் காவற்துறையின் தலைமை ஆய்வாளர் கேரி ஹோமா (Gary Homa) கருத்துத் தெரிவிக்கையில், “இவ்வாறான போலி அழைப்புகள் அவசரகாலச் சேவைகளின் கவனத்தைத் திசைதிருப்புவதுடன் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்துகின்றன. இச் சம்பவம் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என உறைப்பாக எச்சரித்துள்ளார்.
#QatarAirwaysRAFIntercept2026 #ManchesterAirportHoaxThreat #RAFTyphoonConingsby #BoltonTeenHoaxCallArrest #UKCivilAviationSecurityNews

