Home உலகம்சிம்பாப்வேயின் இரும்பு மனிதர் ரொபட் முகாபே காலமானார்…

சிம்பாப்வேயின் இரும்பு மனிதர் ரொபட் முகாபே காலமானார்…

by admin

சிம்பாப்வேயின் நீண்ட கால குடியரசுத் தலைவர் ரொபட் முகாபே காலமாகியுள்ளார். அவர் தனது 95 ஆவது வயதில் காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரொபட் கேப்ரியல் முகாபே கடந்த 1924ம் ஆண்டு ஜனவரி மாதம் 21ம் தேதி பிறந்தார். இவர் சிம்பாப்வேயின்  பிரதமராக 1980 முதல் 1987 வரை பதவி வகித்தார். அதன்பின்னர் 1987ம் ஆண்டு முதல் கடந்த 2017ம் ஆண்டு வரை சிம்பாப்வேயின்  குடியரசுத் தலைவராக இருந்தார். 1960களில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட வீரராக இருந்த ரொபர்ட்டை, ஆப்பிரிக்க மக்கள் தங்கள் நாயகராகப் போற்றினர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More