Home இலங்கை யாழில் இருந்து கஞ்சா கடத்தியவர் டிப்பருடன் கைது!

யாழில் இருந்து கஞ்சா கடத்தியவர் டிப்பருடன் கைது!

by admin

யாழ்ப்பாணத்தில் இருந்து டிப்பர் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்தி சென்ற நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை (27.07.24)  கிளிநொச்சி பூநகரி பகுதியை நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தினை சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் காவற்துறையினர் வழிமறித்து சோதனையிட்டனர்.

அதன் போது, டிப்பர் வாகனத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 கிலோ 485 கிராம் கஞ்சா போதைப்பொருளை காவற்துறையினர் மீட்டனர்.

அதனை அடுத்து டிப்பர் வாகன சாரதியை காவற்துறையினர்கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனம், மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாவகச்சேரி காவல்  நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More