அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில் அமைந்துள்ள ஜாப்ரி எப்ஸ்டீனுக்குச் சொந்தமான ‘சோரோ ரான்ச்’ பண்ணை இல்லத்தில், மாநில அதிகாரிகள் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இணைந்து தற்போது அதிரடிச் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். 2026 மார்ச் 09ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தத் தேடுதல் நடவடிக்கையானது, அண்மையில் பகிரங்கப்படுத்தப்பட்ட ‘எப்ஸ்டீன் கோப்புகளில்’ இடம்பெற்றுள்ள புதிய தகவல்களின் அடிப்படையிலேயே முடுக்கிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக, இப்பண்ணை வீட்டின் மலைப்பாங்கான பகுதிகளில் சிறுமிகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சியூட்டும் சந்தேகத்தின் பேரில், நிலத்தடி ரேடார் மற்றும் மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிரத் தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்தச் சோதனையின் போது, பண்ணை வீட்டின் இரகசியப் பகுதிகளிலிருந்து சில பழைய கணினி வன்வட்டுக்கள் (Hard Drives) மற்றும் கண்காணிப்பு ஒளிப்பதிவுத் தரவுகள் மீட்கப்பட்டுள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை பல ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த பாலியல் கடத்தல் வலையமைப்பின் இரகசியங்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்ட உலகளாவிய முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இந்தக் கோப்புகளில் அடிபடுவது, இந்த விசாரணையின் முக்கியத்துவத்தைச் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.
தற்போதைய பண்ணை நில உரிமையாளர்கள் இந்த விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வரும் நிலையில், நியூ மெக்சிகோ மாநில அரசினால் அமைக்கப்பட்டுள்ள விசேட ‘உண்மை கண்டறியும் குழு’ இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது. இச்சோதனையில் கண்டெடுக்கப்படும் டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் தடயவியல் முடிவுகள், வரும் வாரங்களில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#ZorroRanchSearch #JeffreyEpstein #NewMexicoJustice #EpsteinFiles2026 #HumanTraffickingInvestigation #Bill Gates #StephenHawking #DonaldTrump #Prince Andrew

