Home இலங்கைமுன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு 2 வருட சிறைத்தண்டனை உறுதி: மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு 2 வருட சிறைத்தண்டனை உறுதி: மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

by admin
போலித் தகவல்களைச் சமர்ப்பித்து, சட்டவிரோதமான முறையில் இராஜதந்திர கடவுச்சீட்டைப் (Diplomatic Passport) பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில், இலங்கையின் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உறுதி செய்துள்ளது.
வழக்கின் பின்னணி:
கடந்த 2015ஆம் ஆண்டு, முறையற்ற வழிகளில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து இராஜதந்திர கடவுச்சீட்டைப் பெற்றதாக ஷஷி வீரவன்சவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கொழும்பு நீதவான் நீதிமன்றம், அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து, இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
மேல் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு:
நீதவான் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு எதிராக ஷஷி வீரவன்ச தரப்பினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. எனினும், இந்த மனுவை இன்று பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, நீதவான் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டப்பூர்வமானது என்றும், அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறி, மேன்முறையீட்டை நிராகரித்தார்.
இதன் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட இரண்டு வருட கடூழியச் சிறைத்தண்டனை தற்போது உறுதியாகியுள்ளது. மேலும், இந்தச் சிறைத்தண்டனையை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், இதற்கான தீர்ப்பு விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கும் கட்டளையிட்டுள்ளது.
Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More