58
செய்தியின் முக்கிய அம்சங்கள்:தகுதி: புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பரிந்துரையைப் பெறும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட யாத்ரீகர் குழுக்களுக்கு விசா கட்டண விலக்கு அளிக்கப்படும்.
இந்தியாவிற்கு விஜயம் செய்யும் இலங்கை யாத்ரீகர்களுக்காக வழங்கப்பட்டு வந்த இலவச விசா (Gratis Visa) திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
புதிய விசா சேவை வழங்கி நியமிக்கப்பட்டதன் காரணமாக இச்சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. புதிய சேவை வழங்கி ஜூலை 07 ஆம் திகதி முதல் செயற்படத் தொடங்கியதைத் தொடர்ந்து, இலவச விசா வசதியும் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
விண்ணப்பிக்கும் மையங்கள்: கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் உள்ள இந்திய consular தூதரக மையங்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
உயிரியல் தரவு சேகரிப்பு (Biometric Data): 12 முதல் 70 வயதிற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களது உயிரியல் தரவை (Biometrics) வழங்குவது கட்டாயமாகும். சிரேஷ்ட பிரஜைகளுக்கான வசதி: முதியோர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதைத் தவிர்க்க சிறப்பு விரைவு நடைமுறை (Fast-track process) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
சேவைக் கட்டணம்: விசா இலவசமாக வழங்கப்பட்டாலும், விண்ணப்பங்களைச் பரிசீலிப்பதற்காக இந்திய தூதரக விண்ணப்ப மையத்திற்கு (ICAC) சேவைக் கட்டணமாக ரூ. 1,855 செலுத்தப்பட வேண்டும். இந்தியாவிற்கு ஆன்மீகச் சுற்றுலா மேற்கொள்ளத் திட்டமிடும் இலங்கை யாத்ரீகர்களுக்கு இந்த செய்தி பெரும் சுலபத்தையும் நிவாரணத்தையும் அளித்துள்ளது.
Spread the love

