Home உலகம்எகிப்தில் பலவந்த கடத்தல்கள் குறித்து விசாரணை நடத்தும் சட்டத்தரணி கைது

எகிப்தில் பலவந்த கடத்தல்கள் குறித்து விசாரணை நடத்தும் சட்டத்தரணி கைது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

எகிப்தில் பலவந்த கடத்தல்கள் குறித்து விசாரணை நடத்தும் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சட்டத்தரணியை விடுதலை செய்யுமாறு மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இப்ராகிம் மெற்வலி கெகாசி (Ibrahim Metwally Hegazy) என்ற சட்டத்தரணியே இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் பங்கேற்பதற்காக செல்லும் நோக்கில் கெய்ரோ விமான நிலையம் சென்றிருந்த போது இப்ராகிம்   கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி அதிகாரிகள் இப்ராஹிமை கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More