Home இந்தியா“ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமான திமுக – காங்கிரஸின் முக்கியஸ்த்தர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கவேண்டும்”

“ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமான திமுக – காங்கிரஸின் முக்கியஸ்த்தர்களை போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கவேண்டும்”

by admin


இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியதற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்தபோது இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு உதவிகளை வழங்கியதாக மஹிந்த ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதனால் ஈழத் தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்த திமுக – காங்கிரஸ் கட்சியில் சம்பந்தப்பட்டவர்களை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கவேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் 25 ம் திகதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன.

நேற்று மாலை அதிமுக தலைமையகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைப்பெற்ற போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More