யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதவான்களை நியமிக்க அரசாங்கம் இணங்கியுள்ளது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற நேரிட்டுள்ளது எனவும் இதனால் வெளிநாட்டு நீதவான்கள் விசாரணைகளில் பங்கெடுக்கச் செய்ய அரசாங்கம் இணங்கியுள்ளமை மறுக்கப்பட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானம் குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Add Comment