Home இலங்கை கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற தொடருந்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை…

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற தொடருந்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற தொடருந்தில் தலையை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சிலாபம் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் சிலாபம் அளுத்வத்தை பகுதியில் நேற்றிரவு 8.15 அளவில் நடந்துள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் உடலும் தலையும் வெவ்வேறாகியுள்ளதாகவும் காவற்துறையினர் கூறியுள்ளனர்.

தொடருந்து ஊழியரக்ள் சடலத்தை சிலாபம் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர். உயிரிழந்தவரை அடையாளம் காண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More