Home இலங்கை அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பின் வாங்குவது துரதிஸ்டம்! தர்மலிங்கம் சித்தார்த்தன்:-

அரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்றாமல் பின் வாங்குவது துரதிஸ்டம்! தர்மலிங்கம் சித்தார்த்தன்:-

by admin

அரசாங்கம் தனது வாக்குறுதியை நிறைவேற்றாமல் பின் வாங்கிச் செயற்படுவது துரதிஸ்ட வசமானது என, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது, அரசியல் கைதிகளை விடுதலை செய்வது போன்ற விடயங்கள் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ள நிலையில், அதனைச் செய்வதாக அரசாங்கம் சர்வதேசத்திற்கு உறுதியளித்துள்ள போதும், இன்றும் அரசாங்கம் அதனைச் செய்யாது பின்வாங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சகல அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று (08) யாழ். பிரதான பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட  சித்தார்த்தன், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல தடவைகள் அரசாங்கத்தால் எமக்கு உறுதி மொழி வழங்கப்பட்ட போதும், அந்த உறுதிமொழிகள் பல மாதங்கள் கடந்தும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

ஏறக்குறைய 90 தமிழ் அரசியல் கைதிகள் இன்னமும் சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே நல்லிணக்கத்தைத் தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்துகிறது என்றால் அவர்கள் அனைவரும் எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

அதன் மூலம் தான் அரசாங்கத்தின் உண்மையான நல்லிணக்கத்தை எமது மக்களுக்கு உணர்த்த முடியும்.

ஆகவே, எங்களுடைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படும் வரை எமது மக்களின் போராட்டம் தொடரும், எனக் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More