Home இலங்கைஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – TNA

ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் – TNA

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

ஐக்கிய நாடுகள்அமைப்பிற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள அன்டெனியோ குடராஸிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கையில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் அமைப்பு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார். மீளவும் இலங்கையில் யுத்தம் ஏற்படாமல் தடுத்தல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதல் போன்றன தொடர்பில் பொதுச் செயலாளர் பான் கீ மூன் முன்னெடுத்த திட்டங்களை தொடருமாறு சம்பந்தன் புதிய பொதுச் செயலாளரிடம் கோரியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More