Home உலகம் பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 58 பேர் பலி

பாகிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 58 பேர் பலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு

பாகிஸ்தானின் குவாட்டாவில் அமைந்துள்ள காவல்துறை பயிற்சிக் கல்லூரி ஒன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 58 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

காவல்துறைக் கல்லூரிக்குள் மூன்று தற்கொலை குண்டுதாரிகள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் இந்த தற்கொலையாளிகளை அதிகாரிகள் கொன்றுள்ளனர் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.  பலுகிஸ்தான் காவல்துறை பயிற்சி கல்லூரியில் நூற்றுக்கணக்கான பயிலுனர்கள் தங்கியிருந்த நிலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதனால்  பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்ட மூன்று தீவிரவாதிகளும் லஷ்கர்-இ-ஜாங்வி தீவிரவாத அமைப்பின் அல்-அலிமி பிரிவைச் சேர்ந்தவர்கள் என தொவிக்கப்பட்டுள்ள நிலையில் படுகாயமடைந்த 120 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More