Home பல்சுவைபிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைந்தார்

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைந்தார்

by admin

பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா, உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். பாலமுரளி கிருஷ்ணா, திரைத்துறையிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.  400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ள பாலமுரளி கிருஷ்ணா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 8 மொழிகளில் பாடியுள்ளார். பக்த பிரகலாதா என்கிற தெலுங்குப் படத்தில் நாரதராக நடித்தார்.1976-ல் சிறந்த பாடகருக்கான விருதை, ஹம்சகீதே என்கிற கன்னடப் படத்துக்காகப் பெற்றார். 11 வருடங்கள் கழித்து, மாதவச்சாரியா என்கிற படத்துக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

2009-ல் வெளியான பசங்க படத்திலும் அன்பாலே அழைக்கும் வீடு என்கிற பாடலைப் பாடினார். 1977-ல் கவிக்குயில் படத்தில் இளையராஜா இசையமைப்பில் இவர் பாடிய சின்ன கண்ணன் அழைக்கிறான் பாடல் மிகவும் புகழ்பெற்றது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More