Home பிரதான செய்திகள் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லை – கங்குலி

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு எனக்கு தகுதி இல்லை – கங்குலி

by admin

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட்  அணித் தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.  இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு கங்குலியே பொருத்தமானவர் என்று முன்னாள் தலைவரும்  தொலைக்காட்சி ; வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே கங்குலி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கங்குலி; தற்போது பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள நிலையில்; கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு தனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளது எனவும்  தான் அதற்கு தகுதியானவன் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியை தான் ஏற்று ஒரு ஆண்டு தான் ஆகிறது எனவும்  இன்னும் 2 வருடங்கள்   ஒப்பந்தம் இருக்கும் நிலையில்  கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கான போட்டியில் தான் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More