Home இலங்கை காணாமல்போன நான்கு மீனவர்கள் இரு வாரங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல்போன நான்கு மீனவர்கள் இரு வாரங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

by admin

கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி கடலுக்கு சென்ற நிலையில்  காணாமல்போன நான்கு மீனவர்களும் இரு வாரங்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.  கல்முனையை சேர்ந்த குறித்த  மீனவர்கள் நால்வரும் மற்றைய படகுடன் இன்று  அதிகாலை மாலைதீவு கரையோரப் பாதுகாப்பு படையினரினால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இத்தகவலை மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர், உறுதிப்படுத்தியதாக  அவா்  தெரிவித்துள்ளார்.  ஒலுவில் துறைமுகத்தில் இருந்து இரண்டு இயந்திர படகுகளில் கடலுக்கு சென்ற  ஆறு மீனவர்களில்  இருவர்  ஒரு படகுடன் கடந்த 05 ஆம் திகதி மாலைதீவு கடற்பரப்பில் அந்நாட்டு கடற்படையினரினால் காப்பாற்றப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மீகட்கப்பட்ட மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More