Home இலங்கை மீள்குடியேற்றம் தொடர்பில் 24 ஆம் திகதி விசேட கூட்டம்

மீள்குடியேற்றம் தொடர்பில் 24 ஆம் திகதி விசேட கூட்டம்

by admin

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து  எதிர்வரும் 24 ஆம் திகதி விசேட கூட்டம் ஒன்று இடமட்பெறவுள்ளது.  புனர்வாழ்வு, மீள்குடியேற்ற இந்து மத விவகார மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதனைத் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் மக்களின் காணிகள் இராணுவத்தினரின்  பயன்பாட்டுக்காக உள்ள நிலையில் அது தொடர்பான கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், வடக்கு கிழக்கை பிரதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், இராஐhங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் அழைக்கப்படவுள்ளதாகவும் இந்த சந்திப்பின் ஊடாக  மேலும்  சில இடங்கள் விடுவிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல்கைதிகள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்  அவர்களின்  விடுதலை என்பது அரசாங்கத்தின் சட்ட நடவடிக்கைகளில்தான் தங்கியிருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More