Home உலகம் ஈரானில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்

ஈரானில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்

by admin

ஈரானின் வடக்குப் பகுதியில்  உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் நேற்று இடம்பெற்ற  வெடி விபத்தில்  சிக்கி 35 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த நிலச்சுரங்கத்தில்  சுமார் 500 தொழிலாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்ற  நிலையில், நேற்றையதினம்   சுரங்கத்தினுள் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.   மீட்கப்பட்ட பல தொழிலாளிகள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும்  சுரங்கத்தினுள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் 2 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்பதில் சிரமம் இருப்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More