Home உலகம் ஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலி

by admin


ஆப்கானிஸ்தானில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவமொன்றுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட்டிருந்தது.

ஜனாதிபதி மாளிகைக்கு போராட்டக்காரகள் பிரவேசிப்பதனை தடுக்க நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை காபூலில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 90 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனக் கோரி சிலர் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் ஒருவர் பிரபல அரசியல்வாதி ஒருவரின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதலுக்கு ஐஎஸ்  அமைப்பும் உரிமை இருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More