Home உலகம்அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

by admin


அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் கீழ் இயங்கி வரும் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு ஆணையகத்தின் ஒரு பில்லியன் ரூபா நிதி, வீடுகளை அமைப்பதற்கு ஒதுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாடகை அடிப்படையில் வீடுகளில் தங்குவதற்கு தேவையான வாடகை வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார். அத்துடன் பாடசாலைகளை புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More