Home இலங்கை கிளிநொச்சியில் காற்றினால் முன்பள்ளியின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது

கிளிநொச்சியில் காற்றினால் முன்பள்ளியின் கூரை தூக்கி வீசப்பட்டுள்ளது

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இன்று  முற்பகல் 11.30  மணியளவில் வீசிய பலத்த  காற்றினால்  உதயநகரில்  அமைந்துள்ள சிறுவர்  முன்பள்ளியின் கூரை தூக்கி  வீசப்பட்டுள்ளது. இதன்   போது மூன்று ஆசிரியர்களும்  நாற்பதைந்து மாணவா்களும் குறித்த  கட்டடத்துக்குள்  இருந்துள்ள போதிலும்   எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை

இந்தநிலையில் குறித்த முன்பள்ளிக்கு  சென்ற  பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்  மற்றும் கிளிநொச்சி மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் கிராமமட்ட அமைப்புக்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ,கிராமசேவையாளர் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருடன் நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளனா்

இதன்போது  குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர்  குறித்த முன்பள்ளியை  புனரமைத்து தருவதாக கூறியுள்ளனர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More