Home இலங்கை தினேஸ் குணவர்தனவிற்கு எதிராக விசாரணை நடத்தப்படக் கூடாது – சரத் அமுனுகம

தினேஸ் குணவர்தனவிற்கு எதிராக விசாரணை நடத்தப்படக் கூடாது – சரத் அமுனுகம

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்தனவிற்கு எதிராக விசாரணை நடத்தப்படக் கூடாது என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தினேஸ் குணவர்தனவிற்கு எதிராக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினால், விசாரணைக்கு உட்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிரேஸ்ட அரசியல்வாதியான தினேஸ் குணவர்தனவை மிக நீண்ட காலமாக தெரியும் எனவும் அவர் நேர்மையானவர் எனவும் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் அமைச்சரிடம் விசாரணை நடாத்துவது பொருத்தமற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More