Home இலங்கை வெலிக்கடை சிறை படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல்

வெலிக்கடை சிறை படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வெலிக்கடை சிறை படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் நல்லூருக்கு அருகில் இடம்பெற்றது.

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி தங்கத்துரை , ஜெகன் உள்ளிட்ட 53 போராளிகளின் நினைவேந்தல் நிகழ்வு வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

நல்லூர் பின் வீதியில் திலீபனின் நினைவு தூபிக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் ஈகை சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அந்நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் , மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் மற்றும் புவனேஸ்வரன் ஆகியோரும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More