Home இலங்கை ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் – திலங்க சுமதிபால

ரவி கருணாநாயக்க பதவி விலக வேண்டும் – திலங்க சுமதிபால

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலக  வேண்டுமென பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் நன்மதிப்பை பாதுகாப்பதற்காக ரவி கருணாநாயக்க தனது பதவி விலக  வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் என்ற அடிப்படையில் தாம் இதனைக் கூறவில்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் என்ற அடிப்படையில் இதனைக் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்க தொடர்ந்தம் பதவியில் நீடித்தால் அது அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More